Saturday, 17 February 2024

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 4

 வேலன்டைன் டே ஸ்பெசல் ...

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 4
இளைஞரால்
இளைஞர்களுக்காக
இளைஞருடைய படையல்.....

உன் வீட்டு சொர்க்க வாசல்
திறக்கும் வரையில்
நிறங்கள் கருப்பாய்
உயிர்கள் மயங்கி
இருளேறி இருக்கின்றன.
வாசலில் கோலமேற்றி
உலகை துவக்கி வைத்து போ.

உன் காலடிச்சுவடுகளை
தழுவி முத்தமிட
அலைகள் முயல்கின்றன.
தனக்கே உரிமையென்று
கடற்கரை மறைத்துக் கொள்கிறது.

மாத இதழ்கள்
வார இதழ்கள் போலில்லா
மன்மத இதழ்கள்
உன்னுடையவை.
இதழ் கொண்ட வரியெல்லாம்
சொற்களை கொள்ளாமல்
சொர்க்கத்தை கொண்டவை...

உன் பெயரை தொடர்ந்து வர
என் பெயர் தவமிருக்கிறது.
இழுத்துச் சேர்த்துக் கொண்டு
இதயத்தை வரமாய் கொடு.

அன்பை முதலாய் இட்டு
உயிரை விதையாய் இட்டு
காதல் பயிர் செய்பவன் நான்.
கொள்முதல் செய்வாயா
கொல் முதல் செய்வாயா..

உன்னுடன் பேசி தமிழைக் கற்றேன்
பேசாத தருணங்களில் ஆங்கிலம் கற்றேன்.
கண்ணசைவில் கணிதம் பயின்றேன்
சந்திப்புகள் எல்லாம் வரலாறு ஆகின
உந்தன் மேனியே எனக்கு புவியியல் ஆனது .
மொத்தத்தில் நீ எனது காதல் கல்லூரி.

உன்னுடன் பேசிய நாட்கள்
சுவர்க்கம் ஆகின.
பேசாத நாட்கள் நரகமாகின.
கண்டு, பேசமுடியா நாட்கள்
திரிசங்கு நரகமாகின.

நீ கட்டும் பட்டு சேலைக்காக
புழுக்கள் உயிர்துறக்கும்.
பஞ்சுகள் சேலையாக
பருத்திகள் மோட்சம் புகும்.
உன் தரிசனம் கிடைத்தால்
உலகம் சுபிட்சம் பெரும்.

சாதல் இல்லா உலகம்
காதலில் சாத்தியம்
காதல் இல்லா உலகில்
சாதலே சாஸ்வதம்..
All reactions:
Lasyaa, Thiruppathi Vasagan and 38 others

No comments:

Post a Comment